Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 8

8
பக்கம் 72

அவன் கண்களால் சாடை காட்டினான். அவள் அருகில் சென்றாள். அவன் அவள் கரங்களைப் பற்றினான். "உன்னை நான் காதலிக்கிறேன்" என்றான் அவன்.

செல்லம் விரலைக் கடித்துக் கொண்டாள். அவள் மருண்ட விழிகள் அங்குமிங்கும் பயத்துடன் பார்த்தன. புத்தகம் மார்பில் சாய்ந்தது. "சே புத்தகம் வாசிக்கும் போதும் இவ்வளவு பயமா? என்றது உள்ளம். இந்தக் கதையிலே வருகிற மாதிரித்தான் வாழ்க்கையிலும் நடக்குமா? அவன் வருவானா? அப்படிச் சொல்வானா? ´அது அப்படிச் சொல்லாது. வெக்கமில்லையே அப்பிடிச் சொல்ல! அதுக்கும் என்னிலை விருப்பமே? ஏன் பின்னே அப்படிப் பார்த்ததாம்? அன்றைக்குப் பயமில்லாமல் என்னோட கதைச்சுப் போட்டிது. அது என்னைக் காதலிக்க இல்லையென்றால் என்ன செய்யிறது?´ செல்லம் ஏக்கத்தோடு கன்னத்தில் கையை வைத்தாள்.

""இன்னும் கொஞ்சம் கறி போடட்டே?"
உள்ளே மீனாட்சி மகாதேவனைக் கேட்டாள்.

"இவன் இளங்கோக்கு இறைச்சி அனுப்ப இல்லையே?" மகாதேவன் கேட்டான்.

´அண்ணனுக்கு அதிலே நல்ல பிடிப்பு´ அவள் நினைத்தாள்.

"அதுகளோட சும்மா, சும்மா கொண்டாட்டம் வேண்டாம். உன்ரை மாமாவை பகைக்க ஏலுமே?"


பக்கம் 73

தாய் கேட்டாள். செல்லத்துக்கு துக்கமாக இருந்தது. "நல்ல மாமாமார். பாவம் அவன்ரை வேலையையும் கெடுத்து, உங்கடையாக்கள் எல்லாரும் இப்பிடித்தான். ஏனிந்த எரிச்சல்? தாங்கள் வாழ்ந்தால் போதுமே? மற்றவை மனுசரில்லையே?" மகாதேவன் கேட்டான்.

"இப்ப நீ சாப்பிட வந்தனீயோ? உந்த பேய்க்கதைகள் கதைக்க வந்தனீயோ?" மீனாட்சி சிறிது கோபமாகக் கேட்டாள்.

"இப்ப என்ன சொல்லிப் போட்டன்? சோறு போடக்க என்றாலும் சந்தோஷமாகப் போட மாட்டியள். மனுசன் மாடாக உழைக்கிறதுதான் மிச்சம்" மகாதேவன் பதிலுக்குச் சத்தம் போட்டான். செல்லம் எழுந்து அடுக்களைக்குள் போனாள்.

"நீ போ அம்மா. நான் சாப்பாடு போடுறன். என்ன அண்ணே வேணும்? கொஞ்சம் இறைச்சி போடட்டே?" அவள் கேட்டாள்:

"நீயும் கொண்ணனும் பட்டபாடு. நாங்கள் ஏதாவது சொன்னால் அவருக்குப் பெரிய கோவம். நான் எங்கேயாவது போரன்" தாய் சேலையைச் செருகிக் கொண்டு தன் ஒப்பாரியை வைக்க தேவி வீட்டை நோக்கிப் போனாள். போகு முன்னர் செல்லத்தின் காதில் ஏதோ முணுமுணுத்து விட்டுப் போனாள்.

"என்னடி சொன்னவ?" மகாதேவன் கேட்டான்.

"நீ கோபத்திலே சரியாகச் சாப்பிட மாட்டியாம். வடிவாகச் சாப்பாட்டைப் போட்டுக் குடுக்கட்டாம். செல்லம் சொன்னாள். மகாதேவன் சிரித்துக் கொண்டான்.

"அம்மாக்கு விசரடி. வேலுப்பிள்ளை மாமா செய்தது சரியே...? இஞ்சர்... செல்லம்... கொஞ்சம்


பக்கம் 74

இறைச்சிக்கறி கொண்டு போய் தங்கம் மாமியிட்ட குடுத்து விடு. மனுசி நான் போற நேரமெல்லாம் கருப்பணிக் கஞ்சியும் அதும், இதுவும் தரும்.

"நீ சாப்பிடு. நான் குடுக்கிறன்" அவள் சோற்றைப் போட்டாள்.

"போதும், போதும். நீ போடுறதைப் பார்த்தால் அம்மா பிழையில்லைப் போல இருக்கு.

மகாதேவன் ஒருவாறு சாப்பிட்டு எழுந்தான். செல்லம் ஒரு கோப்பையில் கறியும் கொண்டு, வேலியை நோக்கி நடந்தாள்.

"தங்கம் மாமி... தங்கம் மாமி"

"ஆர்... பிள்ளை? செல்லமே... என்ன மோனை, இந்த வெயிலுக்க?" தங்கம் கேட்டாள்.

"இறைச்சி காய்ச்சினனாங்கள், இந்தாங்கோ"

தங்கம் வேலியை நெருங்கினாள். "உங்களுக்குப் பிள்ளை வேற வேலையில்லை. ஏன் உதெல்லாம்?"

"மாமி, எங்கே உங்கடை மோனைக் காண இல்லை?"

"அதை ஏன் பிள்ளை கேட்கிறாய்? அவனில்லே மேசன் வேலைக்குப் போட்டான்"

"ஓ... அண்ணன் சொன்னவர். பாவம்... படிச்சுப் போட்டு உந்த வெய்யிலுக்குள்ள என்ன செய்யப் போகுது!"

"உன்னாணை மேனை மெய், நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தன். அவன் கேட்டால்தானே. எல்லாம் மேனை என்ரை பாவத்துக்குத்தான்"

"மத்தியானம் சாப்பிட வருமே"

"இல்லை பிள்ளை. கொண்டு போய் குடுக்க வேணும். பிள்ளை, ஒரு வாழையிலை வெட்டித் தாவன்"


பக்கம் 75

"இந்தாங்கோ, கறியைப் பிடியுங்கோ. கத்தியைக் கொண்டு வாங்கோ, வெட்டித் தாரன்" "நேரஞ் சென்று போச்சு, நானும்..." தங்கம் கறியை வைத்து விட்டுக் கத்தியைக் கொண்டு வந்தாள். செல்லம் வாழை இலையை வெட்டிக் கொடுத்தாள்.

"நீயே பிள்ளை இறைச்சி காய்ச்சினனீ?"

"ஓம்... அம்மா உதுகள் தொடமாட்டா இல்லே"

"ஓம்... ஓம்..."

"நேரமில்லே சென்று போச்சு. அது வேலை செய்து களைச்சுப் போயிருக்கும்"

"ஓம் பிள்ளை, நான் பிறகு வந்து கதைக்கிறன்"

தான் சமைத்ததை அவன் உண்ணப் போகிறான் என்பதில் செல்லத்துக்கு ஒரு மகிழ்ச்சி.

"என்ன அங்கே வேலிக்க செய்யிறாய்? வயசு வந்த பெட்டையளுக்கு என்னடி அடுத்த வீட்டிலே வேலை? செல்லம் கரடுமுரடான அக் குருல் வந்த திக்கை நோக்கினாள். சாம்பல் நிறத் தலைமயிர், ஹிட்லர் மீசை, கரிய மேனியில் தொங்கும் வெண்ணிறச் சால்வை... வேலுப்பிள்ளையர் நின்றார். தன்னைச் சுதாரித்துக் கொண்டு செல்லம வரவேற்றாள்:

"வாங்கோ மாமா. அம்மா அடுத்த வீட்டுக்குப் போயிருக்கிறா. வந்து இருங்கோவன்" மகாதேவன் அப்பொழுது வெளியே வந்தான். அவர் முகத்தைப் பார்க்க அவனால் முடியவில்லை. தலை குனிந்திருந்தான்.

"என்னடா மருமகனே, சண்டைக்கு வந்திடாதே. நான் அதுக்கு வர இல்லை. கொம்மாவைக் கூப்பிடன். பிள்ளை தம்பியவை, உங்களுக்கு உலகம் தெரியேல்லை. சொந்த மாமன் தேவையில்லை. மச்சான் தேவையில்லை. யாருக்குப்


பக்கம் 76

பிறந்தது என்று தெரியாததுகளோட கொண்டாட்டம். "மாமா, ஏன் பழைய குப்பைகளைக் கிளறுகிறீங்கள்? இதாலே இப்ப என்ன நன்மை வரப் போகுது? மாமி சுகமாக இருக்கிறாவே?"

"அவளுக்கு என்ன குறை? அந்தப் பக்கம் வந்து பார்த்தாலென்ன?"

"தோட்டமும், வேலையும்.... நேரமென்றால்..."

"அண்ணே, எப்ப வந்தனீ? எடி செல்லம், மாமாக்கு தேத்தண்ணி குடுத்தனீயே?" மீனாட்சி வேகமாக வந்த படியே பேசினாள். வேலுப்பிள்ளையர் கதிரையில் இருந்தார். மகாதேவன் கப்போடு சாய்ந்தவாறு நின்றான். மீனாட்சி தரையில் உட்கார்ந்தாள்.

"சாப்பிட்டியோ? சோறு கிடக்கு. இன்றைக்கு இறைச்சியும் காய்ச்சினனாங்கள்..." மீனாட்சி இழுத்தாள்.

"நான் சாப்பிட்டுத்தான் வந்தனான். மணியனுக்கு வேலை ஒன்று கிடைச்சிட்டுது.

"எங்கடை மணியனுக்கோ? அவன் பிள்ளை இராசா மாதிரி. எங்கேயண்ணை வேலை?"

மகாதேவனின் கண்களில் ஆவல் தெரிந்தது.

"சும்மாவே, கவன்மேந்து வேலையில்லே. கிராமசமையிலே கிளார்க் வேலை."

"பிள்ளையாரே, பிறகென்ன? அவன் கெட்டிக்காரன். என்ரை மோனும் இருக்கிறான். காற்சட்டை போடுவம், நாலு இங்கிலீசு பேசுவம், அதுகள் கிடையாது. தோட்டம் செய்யத்தான் தெரியும்.

"அம்மா மற்றவன் வாழ்கையிலே முன்னேறுகிறான் என்றால் அதற்கு சந்தோசப் படு. ஏலாது என்றால் பேசாமல் இரு. ஏன் உன்ரை மோனை ஒப்பிட்டுப் பார்ர்த்து உன் மனசைக் கஷ்டப் படுத்துகிறாய்?" மகாதேவன் கேட்டான்.


பக்கம் 77

"எது அண்ணே முன்னேற்றம்? காற்சட்டை போட்டால் முன்னேற்றமே? அப்பிடியென்றால் எங்கடை நாடு எப்பவோ முன்னேறியிருக்குமே! உந்தக் காற்சட்டை போட்டதுகளுக்கும் சேர்த்துத்தானே உன்னைப் போல உள்ளவை உழைக்க வேண்டியிருக்கு"

செல்லம் இப்படிப் பேசுவது வெகு குறைவு. ஆனாலும் தாயின் வார்த்தைகளால் அண்ணன் மனம் நோகக் கூடாதே என்ற எண்ணத்தோடு, வேலுப்பிள்ளையர் மீது அவளுக்கு இயற்கையாக உள்ள வெறுப்பையும் அவள் அப்படிக் கொட்டினாள்.

"போடி உள்ளே, அவவின்ரை வாயைப் பார். வர வர உங்களுக்கு வாய் பெருக்கிது. மாமாக்கு முன்னாலே பேசுகிற பேச்சே இது?" மீனாட்சி சீறினாள்.

"அவள் சின்னப் பெட்டை. அவளை ஏன் திட்டிறாய்? செல்லம், நீ போய் தேத்தண்ணியைப் போடு பிள்ளை. மீனாட்சி, உன்னோட கொஞ்ச விசயம் கதைக்க இருக்கு" வேலுப்பிள்ளையர் அங்குமிங்கும் பார்த்தார். மீனாட்சி புரிந்து கொண்டாள்.

"மகாதேவா, வெற்றிலை முடிஞ்சுது, வாங்கிக் கொண்டு வாறியே?" எப்பிடி அங்கிருந்து போவதென தடுமாறிக் கொண்டிருந்த மகாதேவன் மெல்ல வெளியேறினான். செல்லம் அந்தப்புரத்துக்குப் போனாள். அதாவது அடுக்களைக்கு. வேலுப்பிள்ளையரும், மீனாட்சியும் குசுகுசுவெனக் கதைத்தார்கள். மிகவும் முக்கியமான விசயத்தை அவர்கள் கலந்தாலோசிக்கிறார்கள் என்பது முகபாவனையில் தெரிந்தத: செல்லத்தின் மனதில் இனந் தெரியாத ஓரு சஞ்சலம் ஏற்பட்டது.

"ஏன் இந்த மனுசன் இப்ப இஞ்ச வந்தது?" மகாதேவன் மனதிலும் பெரிய கேள்விதான். கடைசியாக மலர்ந்த முகத்துடன் வேலுப்பிள்ளையர் எழுந்தார்.


பக்கம் 78

அப்ப மீனாட்சி, உன்ரை கையிலைதான் விசயமிருக்கு. நாங்கள் ஒன்றுக்க ஒன்று. ஏதோ ஒன்றாக இருக்க வேணும் என்றுதான் என் ஆசை"

"நீயேன் கவலைப் படுகிறாய்? அப்பு, அம்மாவே இருந்தால் இப்ப எவ்வளவு சந்தோசப் படுவினம், அண்ணே" எல்லாம் நல்லா நடக்கும். நான் நாளைக்கு வீட்டுப் பக்கம் வாரன்" மீனாட்சி சொன்னாள்.

"இஞ்ச பார் என்ரை மறதியை... "செல்லம்... செல்லம்..." மாமா கூப்பிட்டார்.

"என்ன மாமா?" செல்லம் வந்தாள்.

"மாமி உனக்குக் குடுக்கச் சொன்னவள்" ஒரு பார்சலை அவர் நீட்டினார்.

"அட சீலையே...! அம்மா இஞச பாரன். மாமி சீலை அனுப்பியிருக்கிறா. நானின்னும் போடக் கூடத் தொடங்கவில்லை"

"நீ இன்னும் சின்னப் பிள்ளையே? அது அது அந்தந்த வயசிலே நடக்கும். மாமி உன்னிலே எவ்வளவு அன்பு, பார்த்தியே?" தாய் கேட்டாள்.

"அப்ப நான் வரட்டே" வேலுப்பிள்ளையர் கேட்டார்.

"செல்லம், அந்த மாம்பழம் கொஞ்சம் இருக்குது இல்லே?" மீனாட்சி வினவினாள்.

"கொஞ்சம் நில்லுங்கோ, மாமா. கொண்டு வாரன்" செல்லம் உள்ளே ஓடினாள்.

"கொத்தானுக்கும் சேர்த்து நல்ல பழமாக எடு பிள்ளை" மீனாட்சி சொன்னாள். செல்லத்தின் மனதில் மீண்டும் அந்தப் பயம் எழுந்தது. "யாருக்கோ நல்ல பழத்தைத் தெரிந்து எடுக்கச் சொல்லுறியே அம்மா, எனக்குத் தேவையானதை நான் எடுக்கு விடுவாயா?" அவளிதயம் கேட்டது. வேலுப்பிள்ளையர் மனநிறைவுடன் விடைபெற்றுக் கொண்டார்.


பக்கம் 79

"செல்லம்" தாய் இவ்வளவு அன்பாக அவளை என்றுமே அழைத்ததில்லை.

"என்னம்மா?"

"வா உனக்குத் தலை இழுத்து விடுகிறன்" அன்பான அந்த அழைப்பு செல்லத்துக்கு அதிசயமானதுதான். செல்லம் சீப்பும் கையுமாகத் தாயின் அருகில் போய் அமர்ந்தாள். தாய் தலையை வார ஆரம்பித்தாள்.

“செல்லம், தோட்டத்தைப் பார்த்தியே, மிளகாய் எல்லாம் பழுத்திட்டுது“

"ஓமம்மா, இனி எல்லாம் பிடுங்கிக் காய வைச்சு, விற்க வேண்டியதுதான்."

"பார்த்தியே அம்மா, ஆட்டுக்குட்டி துள்ளுகிற துள்ளலைப் பார்."

"துள்ளுகிற வயசிலை துள்ளுது. இன்னும் கொஞ்ச நாளிலே யார் கையுக்குப் போகுதோ?"

"எதுதானம்மா நிலையானது? மாலையிலே வாடி விடும் என்று காலையிலே பூத்த மலரைப் பார்த்து கவலைப் படலாமா? பூத்திருக்கிற நேரம் அழகாக இருந்தால் அதைப் பார்த்து பூரிக்கிறது தானம்மா இன்பம். நாளை என்ன நடக்குமென்று இன்றைய அமைதியை ஏனம்மா கெடுக்க வேணும்?"

"வாழ்க்கை நீண்ட கால, நீண்ட தூரப் பயணமடி. அதின்ரை ஒவ்வொரு பகுதியையும், திட்டம் போட்டு, எதிர்பார்த்து நடக்க இல்லையென்றால் ஏமாற்றம்தானடி கிடைக்கும்"


பக்கம் 80

"அம்மா, காலம் மாறுது. என்னத்தை நாங்கள் திட்டமிட்டாலும் இடையிலே ஏற்படுகிற மாற்றங்கள் எங்கள் மனக்கோட்டைகளை எல்லாம் தரைமட்டம் ஆக்கிடுதே. எதிர்பாராதவை எத்தனையோ நடக்குது. எங்கள் வாழ்க்கை கனவு காண்கிறதிலேயே கழிந்திடுது.நாங்கள் வாழவேயில்லையே என்று கடைசி நேரம் மட்டும் கவலைப் படுகிறம்."

"பிள்ளைகளைப் பெத்தவைக்கு என்ன செல்லம் கவலை? தன்ரை பிள்ளை நல்ல, பாதுகாப்பான இடத்திலே சந்தோஷமாக வாழவேணுமே என்றுதானே நினைக்கிறம்."

"அன்பு, பாசம் வாழ்க்கையிலே அத்தியாவசியமானவை. அவைகளை அடையாதவன், அடைய முடியாதவன் மனிதனாக வாழவே முடிகிறதில்லை. ஆனால் அன்பும், பாசமும் மட்டும் இருந்தால் போதாதம்மா. ஓரளவுக்கு அறிவும் வேணும். கணமூடித்தனமான அன்பும், பாசமும் அதற்குப் பாத்திரமானவனின் வாழ்க்கையையே பலி கொண்டு விடும். அதுக்குப் பிறகு எங்கேயும் கண்ணீர் தானம்மா மிச்சம்."

"அறிவு, அநுபவத்திலே தானடி கிடைக்குது. வயசு போனால் அது தானாக வருகுது."

"அப்பிடியென்றால் வயசு போன ஆட்களெல்லாமே அறிவாளிகளே? இளவயசினர் எல்லாம் முட்டாள்களோ?"

"செல்லம், இதையெல்லாம் எங்கே படிச்சனீ? எங்கடை காலத்திலே தாயைப் பார்த்து இப்பிடிக் கேட்பமே?"

"அம்மா, காலம் மாறுது. அதோட நாங்களும் மாற இல்லையென்றால் வாழ்க்கை வேம்பாகத்தான் இருக்கும். உங்கடை காலத்திலே அறிவுச் சுதந்திரமே இருந்ததில்லை. அதுவும் பெண்களுக்குச் சுதந்திரமேயில்லை."

"நான் உடுக்கிறது, உண்ணுறது எது என்றதையே அப்புதான் தீர்மானிப்பார். அவர் சொன்னதுதான் சட்டம். அவர் தீர்மானிச்சதுதான் எங்கள் வாழ்க்கை. ஆனால் அதை விரும்பி நாங்களும் ஏற்றுக் கொண்டோம்."


பக்கம் 81

"ஆனால் பயந்து, பயந்து வாழ்ந்தியள். உங்கடை உணர்ச்சிகளை கட்டுப் படுத்தினியள். ஆசைகளை அடக்கினியள். மரியாதை என்ற பெயரில் உங்கள் வாய்களுக்குப் பூட்டுக்கள் போடப் பட்டன."

"அது என்னமோ உண்மைதானடி. ஆசையிருந்தால் அதை வெளியிட அச்சம் இருந்தது"

"இன்னொரு பிறவி உனக்கு கிடைச்சால் நீ அப்பிடித்தான் வாழ ஆசைப் படுவியா?"

"இதென்னடி கதை? இதையெல்லாம் பெண்டுகள் கதைக்கிறதே. நாலு இளம் பெட்டையளைப் பற்றிக் கதைக்க வேண்டும். சீலை, சட்டையைப் பற்றிக் கதைக்க வேண்டும். இல்லையென்றால் ஊர்வம்மை, அரிசி, மீன் விலையைக் கதைக்க வேணும். நீ ஏதோ பெரிய ஆக்கள் மாதிரிக் கதைக்கிறாய்"

"அம்மா, பொன்னான நேரம் எங்களுக்கும் கிடைச்ச மாதிரி ஆண்களுக்கு கிடைக்கிறதில்லை. அதை எங்கள் நன்மைக்கு நாங்கள் பாவிக்கிறதில்லை. நேற்று நீ சின்னவளாக இருந்து போது ஊர்ப் பேச்சைக் கேட்டு நீயே மனம் நொந்திருப்பாய். ஆனால் இன்றைக்கு நீயே இளம் பெண்களைப் பற்றி எத்தனை வம்பு பேசுகிறாய்? என்னைப் பற்றி நாலுபேர் பேசினால் உனக்கு எப்படியிருக்கும்?"

"காலாகாலத்திலே நடக்க வேண்டியது நடந்தால் பேச இடமில்லையே"

"என் வாழ்க்கை என் கையிலே இல்லையே. நீ தேடி வைச்ச சொத்து, அண்ணன் தேடுகிற சீதனம் இதுகளை நம்பித்தானே ஒருவன் எனக்கு மாலை போடுவான். இது எல்லோருக்கும் இருக்குதே? பொருள் இல்லாதவர்களுக்கு காலாகாலத்திலே என்னதான் நடக்குது? உங்களுக்கு நேரமிருக்கு, உங்கள் கற்பனைக்கு வேலையிருக்கு. நாலு பெண்கள் சேர்ந்தால் நாற்பது பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்திடுவியள். அம்மா, இது ஞாயமே?"


பக்கம் 82


"உதெல்லாம் தேவி சொல்லித் தந்தவளே?"

"வெதும்பிப் போன இதயங்கள், வேதனையில் வெந்து போன பேதைகள் வாய் திறந்து சொல்லாததை நான் சொல்லுறன்"

"உன்னைப் பற்றி நினையன். உனக்கு ஏன் உந்த வம்பு?"

"இது வம்பு இல்லையம்மா. இளம் பெண்களுக்கு இழைக்கப் படுகிற அநீதி. நாளை எனக்கும் நடக்கலாம்."

"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். மாமா ஏன் வந்தவரென்று தெரியுமே?"

"மகளுக்கு எவ்வளவு நகை போடுவாய்? காசாக எவ்வளவு வைச்சிருக்கிறாய்? வீடு, காணியெல்லாம் எழுதித் தருவியே? என்று கேட்கத்தான் வந்திருப்பார்."

"என்ரை பழக்கம் உன்னை விட்டுப் போகாது. ஒட்டிக் கேட்டனீயே?"

"கேட்க என்னம்மா இருக்கு? இதை விட்டால் வேற என்னத்தை மாமா கேட்பார்?"

"மணியன் நல்ல பெடியன்"

"வேலை கிடைக்க முன்னம், பச்சைக் குடிகாரனெண்டு நீதானே பேசுறனீ?"

"குடிகாரனெல்hலம் கூடாதவனே?"

"கூடாதவன் குடிகாரனாகவும் இருந்திட்டால் அது கூடாதுதானே"

"குடும்பப் பெண் நினைச்சால் குடிகாரனையும் திருத்த முடியுமடி"

"அவரைத் திருத்த நான் அவருக்கு மாலை போட வேணுமே? நீ அவருக்கு சீதனம் குடுக்க வேணுமே?"


பக்கம் 83

"எடியே, பேய்க்கதை கதைக்காதே. என்ரை அண்ணன் மகன்"

"அவன் உன்ரை அண்ணன் மகன்தான். நான் உன்ரை மகளம்மா."

"அதுதானடி உன்ரை வாய் இவ்வளவு நீளம்"

மீனாட்சி தலை இழுத்து முடிந்ததால் எழுந்தாள்.

"உன்னோடை என்னடி கதை? கொண்ணனுக்கும் விருப்பமென்றால் சரிதான்"

"அண்ணனுக்கும், மணியனுக்குமே கலியாணம்?"

"பல்லுக் கொட்டிப் போடுவன். கதையாதே"

செல்லத்தின் தலையிலொரு குட்டு விழுந்தது.

"என்ரை விருப்பமில்லாமல் உது நடக்காது" செல்லம் பிடிவாதமாகச் சொன்னாள். கோபமும், வேதனையும் அவள் கண்களில் நீரை வரவழைத்தன.

"நானென்ன ஆட்டுக்குட்டியே, வாரவனுக்கு வித்துப் போட? அவனை எனக்குப் பிடிக்கவில்லை. அவன் எனக்குத் தேவையில்லை."

"நீ தோளுக்கு மேலே வளர்ந்திட்டாய். எடியே வாயைப் பொத்தடி. உனக்கென்ன நாங்கள் நஞ்சே தரப் போறம்?"

"அதையாவது தாங்கோவன், ஒருத்தருக்கும் கரைச்சலில்லை."

"நான் அண்ணனுக்கு ஓமென்று சொல்லிப் போட்டேன்."

"என்னைக் கேட்காமல் ஏன் சொல்ல வேணும்?"


பக்கம் 84

"ஓ... நீ பெரிய ஆளில்லே, உன்னைக் கேட்கிறதுக்கு. எனக்கு ஏறிச்சிது என்றால்..." தான் பின்னிவிட்டட செல்லத்தின் பின்னலைப் பிடித்து இழுத்தாள்.

"அம்மா, நீ பின்னி விட்டதை நீயே குலைக்காதே" செல்லம் சொன்னாள்.

"அது என்ரை விருப்பமடி"

"பின்னினது நீதான், தலை என்ரைதானே?"

"பெத்ததை மறந்து போனீயே. உரிமை எனக்குத்தானடீ"

"நானென்ன காணியோ, பூமியோ, உறுதி காட்டி உரிமை பாராட்ட?"

"அப்ப உனக்கு நான் தேவையில்லை"

"மற்றவர்களை நாங்கள் நம்பி வாழவேண்டி இருக்கிற படியால்தானே எங்கள் வாழ்க்கையை இப்படிப் பாழாக்கிறியள்."

"ஏனடி, அப்பிடிச் சொல்லுகிறாய்? நீ நல்லாயிருக்கிறதற்குத்தானே எல்லாம் செய்யிறன். அவன் கவன்மேந்து வேலை. வடிவான பொடியன்.
சொந்த மச்சான். கரும்பு தின்ன என்னடி கூலியே வேணும்?"

"கரும்போ, வேம்போ என்று உனக்குத் தெரியுமே?" அவர்களது பாதி உரையாடலின் போதே வந்த மகாதேவன் இப்பொழுது உள்ளே வந்தான்.

"அம்மா, அவன் கரும்பு இல்லை. கருந்தேள். கூலியும் குடுத்து, எங்கடை கரும்பையும் நாங்கள் குடுக்கப் போறம், அவன் குதப்பி எறிய. ஏனம்மா உனக்கு இந்த எண்ணம்?"

"பார்த்தியே அண்ணே, எனக்குக் கலியாணம் வேண்டாம். அம்மாவைப் பேசாமல் இருக்கச் சொல்லு."


பக்கம் 85

"இரண்டு பேரும் ஒரு கட்சியே! டேய், இவள் பொம்பிளையின்ரை பேச்சைக் கேட்டு நீ..."

"நீ என்ன ஆம்பிளையே?" செல்லம் கேட்டாள்.

"பார் பார், அவளின்ரை வாயைப் பார். நெருப்புக் கொள்ளி வைக்கோணும். எல்லாம் நீ குடுக்கிற இடமடா. என்ரை ஒரு சொல்லுக்கு மதிப்பில்லை. தாய் பொழிந்து கொண்டு இருந்தாள். செல்லம் வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டாள். மகாதேவன் கிணற்றடியை நோக்கி நடந்தான். அவன் ஒரு வாளி நீரை அள்ளித் திரும்பிய பொழுது தேவி அவன் முன்னே நின்றாள். அவன் முறுவலித்தான். அவளும் பதிலுக்கு நகைத்தாள். அவன் அவள் வாளியில் தண்ணீரை அள்ளி ஊற்றினான்.

"டீச்சர் சோதனைக்கு அப்பிளை பண்ணினனான். உன்ரை காசு இரண்டு மாசத்திலே தந்து போடுவன்."

"அதைப் பற்றிக் கவலைப்படாதே. முதலில் வேலை கிடைக்க வேணுமே!"

"தேவா, கேட்கிறனென்று கோவிக்காதே. எதை எதிர்பார்த்து எனக்கு நீ உதவி செய்கிறாய்?" தேவன் அவளை வெறித்துப் பார்த்தான். எதுவும் பேசாமல் அவன் நடந்தான்.

"தேவா..." அவன் நின்றான்.

"என்ன?" அவன் குரல் கடுமையாக இருந்தது.

"நீ கோவிச்சிட்டாயே?" அவள் குரல் பரிதாபமாக இருந்தது.

"நீ அப்பிடிக் கேட்டிருக்கக் கூடாது."

"இன்னும் கனபேர் இப்ப எனக்கு உதவி செய்ய வருகினம்."


பக்கம் 86

"அப்ப என்ரை உதவி தேவைப்படாது."

"அவை எதையோ எதிர் பார்க்கினம்."

"அதுதானோ அப்பிடிக் கேட்டனீ?"

"இன்னும் கோவமே?"

"தேவி, நீ எனக்கு அ, ஆ... சொல்லித் தந்தனீ. என் தலையிலே குட்டி கணக்குச் சொல்லித் தந்திருக்கிறாய். நான் அம்மா, அம்மா என்று கத்தக் கத்த முகமெல்லாம் சவுக்காரம் போட்டுக் குளிப்பாட்டியிருக்கிறாய். அப்ப எல்லாம் என்னத்தை எதிர் பார்த்தாய்?"

"தேவா" அவள் குரல் கம்மியிருந்தது.

"கள்ளங்கபடம் இல்லாத அந்த வயசிலே எவ்வளவைக் கொடுத்தாய். எவ்வளவை எடுத்தாய் என்று இலாப நட்டக் கணக்குப் பார்க்கத் தெரியாதடா. இந்த வயசு இலாபம் பார்க்கிற வயசு. கொடுக்கிற கை கூட எடுக்கிறதைக் கணக்குப் பார்த்துத்தானடா கொடுக்குது."

"தேவி, உந்தக் கணக்கை நீ எனக்குச் சொல்லித் தர இல்லையே"

"தேவா, என்னுடைய இதயமோ, அன்பு, பாசம், இரக்கம் இதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறது. அவை உள்ள இதயங்கள் உலகில் இல்லையென்ற முடிவுக்கு வந்து எவ்வளவோ நாளாச்சு. என் கணக்கே நாறிப் போச்சு."

"தேவி, உன் வாழ்க்கை ஒரு நாள் மலரத்தான் போகுது. நீயும் கலகலப்பாக எல்லாரையும் போலச் சிரிக்கத்தான் போறாய். மனதைத் தளர விடாதே."

"தேவா, ´உனக்கு இனி என்னடி வாழ்க்கை´ என்ற கேள்வியைத்தான் எல்லாரும் என்னைக் கேட்கிறவை. உன்னைப் போல நல்ல வார்த்தை நாலைச் சொல்லியிருந்தாலே நான் இவ்வளவு கண்ணீர் வடிச்சிருக்கவே மாட்டேன்." அவள் பேசி முடிக்கவில்லை. அவள் கண்ணீருக்கு வேலை மீண்டும் வந்தது.


பக்கம் 87

"நானும் நெடுக, நெடுக பார்க்கிறன். இப்பவும் அங்கே இருந்து பார்த்துக் கொண்டுதான் நின்றனான். எவ்வளவு நேரமாக கிணற்றடியிலே உங்களுக்குக் கதை. தேவி, உனக்கு வெட்கம், ரோசம் கிடையாதே? அவன் இளம் பெடியன். இன்னும் கொஞ்ச நாளையிலே எங்கடை வயசை நீ எட்டிப் பிடிச்சிடுவாய். அவனோட உனக்கு என்னடி கதை? உனக்கு இனி என்னடி வாழ்க்கை? சின்னஞ் சிறுசுகளையாவது வாழவிடன்." மீனாட்சி வார்த்தைகளால் மலரை நெருப்பினால் பொசுக்கினாள். தேவி வேதனை தாங்காது ஓடினாள். ஆனால் வேதனையும் அவளோடுதான் ஓடியது. அவள் கையிலிருந்த வாளிநீர் சேலையை நனைத்தது. அவள் கன்னங்கள் எப்படி நனைகின்றன?

No comments: